சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கும் தலைமைக் குழுத் தலைவராவார். அவர், 5ஆம் நாள் பிற்பகல் இக்குழுவின் 10வது கூட்டத்துக்குத் தலைமை தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார். பல்வேறு நிலைகளிலுள்ள தலைவர்களும் ஊழியர்களும் நான்கு பன்முகப் பணிகள் என்ற தொலைநோக்குடன் சிந்தனையை ஒருங்கிணைத்து, சீர்திருத்தத்தின் ஒட்டுமொத்த நிலையை சரியாக கையாண்டு, சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் வலுப்படுத்தும் பணியை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சில பகுதிகளில் புத்தாக்கச் சீர்திருத்தத்துக்கான சோதனையை முன்னேற்றும் திட்டம், அறிவியல் தொழில் நுட்ப அமைப்பு முறை சீர்திருத்தத்தின் நடைமுறையாக்கத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.