ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படை 5ஆம் நாள் நாட்டின் மேற்கிலுள்ள ஃபராஹ் மாநிலத்தில் தலிபான் ஆயுதக் குழு தொடுத்த தாக்குதலை முறியடித்து, 14 ஆயுததாரிகளைச் சுட்டுக் கொன்றது என்று அந்நாட்டின் இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
4ஆம் நாள் முதல் தலிபான் ஆயுததாரிகள் ஃபராஹ் மாநிலத்தில் தாக்குதல் தொடுத்து வந்தனர். அதற்கு அரசுப் படை வலுவான பதிலடி கொடுத்தது. 2 நாட்கள் தொடர்ந்த தீவிர சண்டையில் பாதுகாப்பு படையினர் மூவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமுற்றனர். தற்போது இந்தப் படை தலிபான் ஆயுததாரிகளைத் தொடர்ந்து தாக்கி வருகிறது என்று அரசுப் படையின் அதிகாரி ஒருவர் கூறினார்.