• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வேளாண் துறைக்கான நிதியுதவிக் கொள்கையில் மாற்றம்
  2015-05-22 17:15:53  cri எழுத்தின் அளவு:  A A A   
வேளாண் துறைக்கான நிதியுதவிக் கொள்கையைச் சரிப்படுத்த சீன அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் தானியங்களை அதிகமாகப் பயிரிடுபவருக்கு பெரும் ஆதரவு கிடைக்கும்.

2015ஆம் ஆண்டு முதல் நடுவண் அரசு முன்கூட்டியே வழங்கும் நிதியுதவியில் 20 விழுக்காடும், தானியம் பயிரிடும் முக்கிய குடும்பங்களுக்கான உதவித் தொகையும், வேளாண் துறைக்கான மானியத்தின் கூடுதல் பகுதியும், பெருளவிலான தானியப் பயிரிடுதலுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் என்று சீன நிதித்துறை அமைச்சகமும் வேளாண் துறை அமைச்சகமும் அண்மையில் வெளியிட்ட ஒரு வழிகாட்டல் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040