வங்காளத்தேசத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்ற சீனத் துணைத் தலைமையமைச்சர் லியூ யான்தூங் அம்மையார் மே 26ஆம் நாள் டாகாவிலுள்ள வட தென் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார்.
சீன மொழி, தேனீர் கலை, காகித கத்தரிப்பு முதலியவற்றைப் அந்நாட்டின் மாணவர்கள் படித்த காட்சியை, வங்காளத்தேசத்தின் வணிக அமைச்சர், கல்வி துறையின் அதிகாரிகள், இப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் சேர்ந்து லியூ யான்தூங் கண்டு இரசித்தார். அத்துடன், அவர் மாணவர்களுடன் அன்புடன் உரையாடினார்.
மேலும், சீன அரசு மற்றும் கன்ஃபியூசியஸ் கழக தலைமையகத்தின் சார்பில், இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கன்ஃபியூசியஸ் கழகத்துக்குச் சீன மொழி பற்றிய பாட நூல்களை அவர் அன்பளிப்பாக வழங்கினார். அத்துடன், சீனாவுக்கு வந்து சீன மொழி பாலம் என்னும் கோடை கால முகாம் நடவடிக்கையில் கலந்து கொள்ள அவர் 100 மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.