• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லீகெச்சியாங்:வணிக முறையை புதுமையாக்க வேண்டும்
  2015-05-27 09:29:49  cri எழுத்தின் அளவு:  A A A   
2015 குய்யாங் சர்வதேச பெரிய தரவு தொழிலின் பொருட்காட்சி மற்றும் உலக பெரிய தரவு காலத்துக்கான குய்யாங் உச்சி மாநாடு 26ஆம் நாள் குய்யாங் நகரில் துவங்கின. சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் இம்மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

தற்போதைய உலகில் புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்ப மற்றும் தொழில் புரட்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடிப்படை மூலவளமும் முக்கிய உற்பத்தி ஆற்றலும் அதற்குரிய தரவுகளாகும் என்று சீன அரசின் சார்பில் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் லீகெச்சியாங் கூறினார்.

சீனா, அதிக மக்கள் தொகை கொண்டிருக்கும் நாடாகவும், தகவல்களை அதிகமாகப் பயன்படுத்தும் நாடாகவும் திகழ்கிறது. பெருவாரியான தரவுகளைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு, பெரிய தரவு தொழிலை வளர்க்கும் எல்லையற்ற இடம் உண்டு. இணையதளம் கூட்டல்(internet plus) எனும் செயல் திட்டத்தைச் சீனா ஆராய்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம், பல்வேறு துறைகளும் பெரிய தரவைப் பயன்படுத்தி வணிக முறையைப் புதுமையாக்கி, கூட்டாக வளர்ச்சி அடைவதே சீனாவின் நோக்கமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040