ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் தூதரக பிரதேசத்தில் 26ஆம் நாளிரவு துப்பாக்கிச் சண்டை மற்றும் கண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளன. தற்போது வரை உயிரிழப்பு பற்றி தெளிவான தகவல் இல்லை.
வெளிநாட்டு மக்கள் வாழும் விடுதியின் மீது தாக்குதல் நடத்துவதே முக்கிய இலக்காகும் என்று தெரிகிறது. காவற்துறையால் சுற்றியுள்ள பாதைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்பதாக இது வரை எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை என்று தெரிகிறது.வாசிர் ஜகீபர் கான் பிரதேசத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் நிறுவனங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.