திபெத்தில், விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதியில் தனிநபருக்கான மருத்துவ உதவித் தொகையை இவ்வாண்டு மீண்டும் ஒருமுறை உயர்த்த லாசா நகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டின் 380 யுவானிலிருந்து 420 யுவானாக அதிகரிக்கப்படும். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரின் சுகாதாரப் பணியகத்தில் கிடைத்த தகவல் மூலம் இது தெரிய வந்துள்ளது.
தற்போது திபெத்தின் விவசாய மற்றும் மேய்ச்சல் பகுதிகள் அனைத்திலும் மருத்துவச் சிகிச்சை அமைப்பு முறை பரவல் செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பு முறையில் சேர விரும்பும் விவசாயி மற்றும் ஆயர்கள் சுமார் 20 யுவான் கட்டணமாகச் செலுத்தினால், ஓராண்டுக்கு அதிகப்பட்சமாக 60 ஆயிரம் யுவான் காப்பீட்டை அவர்கள் பெறலாம்.