《சீனாவின் இராணுவ நெடுநோக்குத் திட்டம்》 என்ற இந்த வெள்ளை அறிக்கை, சீன அரசு வெளியிட்ட 9வது தேசிய பாதுகாப்பு வெள்ளையறிக்கை ஆகும். விண்வெளி பற்றி குறிப்பிடுகையில் விண்வெளியை அமைதியாகப் பயன்படுத்தி, விண்வெளியில் ஆயுதமயமாக்கத்தையும் படைக்கலப்போட்டியையும் எதிர்ப்பதாக சீனா எப்பொழுதும் கருதுகிறது. அதே சமயம், சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாக சீனா பங்கெடுத்து வருவதையும் இவ்வெள்ளையறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் வான்படை ஆணைக் கல்லூரியின் பேராசிரியர் வாங்மிங்லியாங் செய்தியாளரிடம் பேசுகையில், அனைத்து நாடுகளும் விண்வெளியை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தும் உரிமையைக் கொண்டுள்ளன. ஆனால் விண்வெளியில் ஆயுதமயமாக்கும் போக்கை முன்னேற்ற சில நாடுகள் முயற்சிப்பதன் மீது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சீனா, இணையப் பாதுகாப்புப்படையை நிறுவுவது குறித்து சீன மக்கள் விடுதலைப்படை நெடுநோக்கு திட்டப்பிரிவுின் இராணுவ அதிகாரி வாங் ஜின் கூறுகையில்:
"நாட்டின் இணைய பாதுகாப்பைப் பேணிக்காக்கும் வகையில் இணைய தற்காப்பு திறனை வளர்க்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றல் வலுவடைந்ததோடு சீனா வெளிநாடுகளில் கிடைக்கும் நலன்கள் உலகில் அதிகாமாக உள்ளன. வெளிநாடுகளில் கிடைக்கும் நலனுடன் தொடர்புடைய முக்கிய மண்டலம் தொடர்பான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று இந்த வெள்ளையறி்க்கை வலியுறுத்தியுள்ளது. உண்மையில் வெளிநாடுகளிலான நாட்டின் நலன்களைப் பாதுகாக்க சீனாவின் படை பல முறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றில் ஏதென்ஸ் வளைகுடாவில் வணிகக் கப்பல் அணிகளைப் பேணிக்காப்பதும், ஏமனிலிருந்து சீன மக்களை வெளியேற்ற இராணுவ கப்பல்களை அனுப்பியதும் குறிப்பிடத்தக்கவை.
சீனாவின் படைப்பிரிவு, சர்வதேச சமூகத்துக்கு மேலதிக பொது பாதுகாப்பு உதவிகளை வழங்கும் என்று சீன மக்கள் விடுதலைப்படையின் முப்படை தலைமையகத்தைச் சேர்ந்த போரியக்கத்துறையின் இராணுவ அதிகாரி சாங் யு கோ தெரிவித்தார்.
சீனா, வெளிநாடுகளில் தமது நலன்களைப் பேணிக்காப்பதோடு, தன் நலன்களை பல்வேறு நாட்டு மக்களின் பொது நலன்களுடன் இணைத்து, சர்வதேச சமூகத்தின் பொது பாதுகாப்புக்கு உதவியளித்து வருகிறது. மேலும், உலக அமைதி மற்றும் பிரதேச நிதானத்துக்கு ஆக்கப்பூர்வமான பங்கினையும் வழங்கி வருகிறது என்றும் சாங் யு கோ தெரிவித்தார்.