கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை தொடர்பான 6 தரப்புப் பேச்சுவார்த்தையைச் சேர்ந்த தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 தரப்புகள் 27ஆம் நாள் சியோல் நகரில் பேச்சுவார்த்தை நடத்தின. அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டத்தை வட கொரியாவை கைவிட செய்யும் வகையில், அதற்கான நிர்ப்பந்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைக்குப் பின் மூன்று தரப்புகளும் தெரிவித்துள்ளன.
நீர் மூழ்கி எறிவிசை ஏவுகணை சோதனையை மேற்கொள்ளப்போவதாக வட கொரியா அண்மையில் அறிவித்தது. இதனிடையில் வட கொரியாவில் சில உயர் நிலை அலுவலர்கள் தண்டனை விதிக்கப்பட்டனர் என்று தென் கொரிய உளவு வாரியம் கூறியது. மேற்கூறிய பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டன என்று தெரிகிறது.