• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகில் பட்டினி நிலையிலுள்ள மக்கள் குறைவு
  2015-05-28 09:49:57  cri எழுத்தின் அளவு:  A A A   
2015ஆம் ஆண்டு உலகில் உணவின் பாதுகாப்பற்ற நிலைமை எனும் ஆவணத்தை, உணவு மற்றும் வேளாண்மை தொடர்பான ஐ.நாவின் மூன்று முக்கிய நிறுவனங்கள் 27ஆம் நாள் வெளியிட்டன. உலகில் பட்டினி நிலையிலுள்ள மக்கள் தொகை 79 கோடியே 50 இலட்சமாக குறைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த எண்ணிக்கை 21 கோடியே 60 இலட்சம் குறைந்துள்ளது. வளரும் பிரதேசங்களில் உணவு பற்றாக்குறை விகிதமும் அப்போதைய 23.3 விழுக்காட்டிலிருந்து 12.9 விழுக்காடாக குறைந்துள்ளது என்று இந்நிறுவனங்கள் இந்த ஆவணத்தில் தெரிவித்தன.

உணவு மற்றும் வேளாண் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பு நாடுகள் கிராமங்களின் வளர்ச்சி முறை மாற்றத்துக்கு உதவியளித்து, கிராமப்புறத்துக்கான முதலீட்டை அதிகரித்து, அப்பகுதிகளிலுள்ள 300 கோடி மக்களின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவை வேண்டுகோள் விடுத்துள்ளன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040