சௌதி அரேபியா தலைமையிலான கூட்டு படை, 27ஆம் நாள் ஏமன் எல்லைப் பிரதேசம் மற்றும் அந்நாடிடன் தலைநகரான ஸானா மீது வான் தாக்குதல் தொடுத்துள்ளது. இதில் ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அன்று விடியற்காலைப் பொழுதில் ஏமனின் மிக பெரிய ராணுவத் துறைமுகம் மீது வான் தாக்குதல் தொடுத்துள்ளது என்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2 திங்களில் ஏமனின் கடல் படையைப் பாதித்த மிகக் கடுமையான தாக்குதல் இதுவாகும் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.