• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நான்கு கொள்கைகளுடன் நடைமுறைப்படுத்தும் பட்டுப் பாதை நிதியம்
  2015-05-28 15:57:54  cri எழுத்தின் அளவு:  A A A   

பட்டுப் பாதை நிதியத்தின் தலைமை இயக்குநர் ஜின் ச்சி 28ஆம் நாள் சீனாவின் சுவங்ச்சிங் மாநகரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, பட்டுப் பாதை நிதியத்தின் செயல்பாட்டுக் கொள்கைகளை விவரமாக எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைப்பு, பயன், ஒத்துழைப்பு, திறப்பு ஆகிய நான்கு கொள்கைகளின் படி, பட்டுப் பாதை நிதியம் நடைமுறைப்படுத்தப்பட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

நீண்டகால மற்றும் இடைக்கால வளர்ச்சி முதலீட்டு நிதியமாக திகழும் இந்நிதியமானது, ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான ஒன்றிணைப்புக் கட்டுக்கோப்புக்குள், அடிப்படைவசதி, மூலவள வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு பல்வகை நிதி திரட்டும் வழிகளை வழங்கும் என்று ஜின் ச்சி தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற செயல்திட்டக் கட்டுமானத்தை ஆதரிக்கும் நடவடிக்கையாக, 4000 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டுடன், பட்டுப் பாதை நிதியம் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது குறிப்பிடத் தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040