கடந்த சில நாட்களாக அமெரிக்காவும் மெக்சியோவும் கடும் புயல் காற்றினால் ஏற்பட்ட சுழல் காற்று மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தெக்சாஸ் மாநிலத்திலும் ஒக்லஹொமா மாநிலத்திலும் 21 பேர் இதில் பலியாயினர். குறைந்தது 11 பேர் காணாமல் போயினர். தெக்சாஸ் மாநிலத்திலுள்ள அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்நோக்கி இருந்தது. அதனால் அருகிலுள்ள பல்லாயிரக்கனக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.