உலகக் கால் பந்து சம்மேளனத்தின் மாநாடு 28ஆம் நாள் சுவீட்ச் நகரில் துவங்கியது. இத்துவக்க விழாவில் உரை நிகழ்த்திய இவ்வமைப்பின் தலைவர் புராட், உலகக் கால் பந்து சம்மேளனத்தில் ஏற்பட்ட ஊழல் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க போது மறுத்துவிட்டார்.
27ஆம் நாள் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தைச் சேர்ந்த சில அலுவலர்களும் உயர் நிலை விற்பனை நிர்வாக பணியாளர்களும் ஸ்வீட்சு மற்றும் அமெரிக்காவில் கைது செய்யப்பட்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழல் ஒழிப்பு பற்றி புராட் மனவுறுதியை தெரிவித்தார். அதேவேளையில், உலக கால் பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியை தாம் மீண்டும் வகிப்பதன் மூலம், உலகளவில் கால்பந்து மீதான மக்களின் நம்பிக்கையை மீட்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.