ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை தொடர்பான 6 நாடுகள் மற்றும் ஈரானின் சுமார் 250 தொழில் நுட்ப நிபுணர்களும் தூதாண்மை அலுவலர்களும் பன்முக உடன்படிக்கையின் அம்சங்கள் குறித்து கலந்தாலோசித்து கொண்டிருக்கின்றனர் என்று ஆஸ்திரியாவின் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.
ஒரு மேலை நாட்டின் தூதாண்மை அலுவலர் பேசுகையில், இறுதி கால வரம்புக்குப் பின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது, இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் பல்வேறு தரப்புகளின் ஒத்த கருத்து என்று தெரிவித்ததாக ஆஸ்திரியா செய்தி நிறுவனம் 27ஆம் நாள் செய்தி வெளியிட்டது.
ஈரான் செய்தி ஊடகத்தின் தகவலின்படி, மேலை நாடுகள் அளவுக்கு மீறிய கோரிக்கை வைக்காமல் இருந்தால், இறுதி கால வரம்பு வரும் முன் பன்முக உடன்படிக்கை உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஷெரிஃபு 27ஆம் நாள் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தெரிவித்திருந்தார்.