• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கிரேக்கிதற்கு நிதியுதவி பற்றிய பேச்சுவார்த்தையில் காலவரப்பு நீட்டிப்பில்லை
  2015-06-29 11:02:19  cri எழுத்தின் அளவு:  A A A   

கிரேக்க நிதி அமைச்சர்

 

கிரேக்கத்தின் கடன் நெருக்கடிக்கு உதவி அளிக்கும் கால வரம்பை நீட்டிக்க போவதில்லை என, யூரோ பிரசேத்தின் 18 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் 27ஆம் நாள் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ள கிரேக்க நிதி அமைச்சர், கூட்டம் முடிவதற்கு முன்பு கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

கிரேக்கத்திற்கு உதவி அளிப்பதற்கான பேச்சுவார்த்தையில் காலவரப்பு நீட்டிப்பில்லை என்ற தகவலை, சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளதாக, இந்த நிதியத்தின் தலைவர் கிரிஸ்டீன் லகர்தே 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார். இத்தகைய முடிவுக்கு ஏமாற்றம் தெரிவித்ததோடு, சர்வதேச நாணய நிதியம் கிரேக்க அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகிறது என்றும் லகர்தே வாக்குறுதி அளித்தார்.

கடன் வழங்கும் தரப்புகள் முன்வைத்துள்ள கடன் நெருக்கடிக்கு தீர்வு பற்றிய உடன்படிக்கை வரைவு குறித்து, ஜுலை 5ஆம் நாள் கிரேக்கத்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு நடைபெறும் தீர்மானம், 28ஆம் நாள் கிரேக்கத்தின் நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

கிரேக்கத்தின் கடன் நெருக்கடிக்கான உதவித் திட்டம் ஜுன் 30ஆம் நாள் முடிவுக்கு வரவுள்ளது. கடன் வழங்கும் தரப்புகள் 25ஆம் நாள் முன்வைத்த ஆரம்ப ஒப்பந்தத்தின்படி, தற்போதைய உதவி ஒப்பந்தத்தின் காலம் 5 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு நவம்பர் திங்கள் வரைத் தொடரும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040