உலக சிந்தனை கிடங்கு உச்சிமாநாட்டின் 4ஆவது சிறப்புக் கருத்தரங்கு 27ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. உலகத் தொடரவல்ல வளர்ச்சியும் சிந்தனை கிடங்கின் பங்கும் என்பது அதன் தலைப்பாகும்.
அமெரிக்க பென்சிவேனிய பல்கலைக்கழகம், ஐரோப்பிய சீர்திருத்த மையம், இந்தியாவின் ஜவஹரால் நேரு பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய லோயி சர்வதேசக் கொள்கை ஆய்வகம், சீன ரன்மின் பல்கலைக்கழகம், சீனச் சமூக அறிவியல் கழகம், சீன தற்கால பன்னாட்டு உறவு ஆய்வகம், சீன மக்கள் வங்கி முதலியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.