2015 சீன-ஐரோப்பிய நகர மயமாக்கத்துக்கான கூட்டாளியுறவு கருத்தரங்கு ஜுன் 29-ஆம் நாள் பிற்பகல் பிரசல்ஸில் நடைபெற்றது. சீனத் தலைமையமைச்சர் லீகெச்சியாங், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜுங்கர் ஆகியோர் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர்.
லீகெச்சியாங் உரைநிகழ்த்தியபோது கூறுகையில், சீனாவின் நகர மயமாக்கப் பிரச்சினையைத் தீர்ப்பது, சீனப் பொருளாதார அதிகரிப்பு மற்றும் நவீன கட்டுமானத்துக்கு நீண்டகால இயக்காற்றல் வழங்கும். அத்துடன், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே ஒன்றுக்கொன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கு இதுவும் புதிய வாய்ப்புகளை வழங்கும் என்றார்.
ஜுங்கர் கூறுகையில், நகர மயமாக்க கட்டுமானத் துறையில், சீனாவுடன் இணைந்து ஒன்றுக்கொன்று அனுபவங்களைப் பரிமாறி கொண்டு, சீனாவுக்கான முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாக மாற வேண்டும் என்று தெரிவித்தார்.