• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜம்முவில் இராணுவத்திற்க்கான சிறப்பு சலுகைகள் தொடரும் இந்திய உள்துறை அமைச்சர்
  2015-07-03 11:17:43  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீரில் புனித பயணம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பு குறித்து கண்காணித்திட இரண்டு நாட்கள் பயணமாக காஷ்மீர் மாநில கோடைத் தலைநகர் ஸ்ரீநகருக்கு ஜீலை 2 ஆம் நாள் சென்றுள்ளார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது, இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் இந்த பகுதியின் பாதுகாப்பில் முன்னேற்றம் காணப்படும் வரை தொடரும் என்று தெரிவித்தார்.

இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சர்சைக்குரிய சிறப்பு சலுகை சட்டம் 1990 ஆண்டு முதல் அமலில் உள்ளது, இந்த சட்டம் துவங்கி ஜீலை திங்கள் 25 ஆம் நாளுடன் 25 ஆண்டுகள் ஆகின்றது. இந்த சட்டத்தின் மூலம் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுட்டுக்கொல்ல இராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொதுமன்னிப்பு கண்காணிப்பு அமைப்பு காஷ்மீரிலுள்ள இந்திய இராணுவத்தின் மீது தொடுத்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு குறித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040