• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் 30 காவற்துறையினர் பலி
  2015-07-03 18:54:11  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுலை 2ஆம் நாள் ஆப்கானிஸ்தான் காவற்துறையினருக்கும் தலிபான் ஆயுதக் குழுவினருக்கும் இடையில் நாட்டின் கிழக்கிலுள்ள வர்டாக் மாநிலத்தில் தீவிரச் சண்டை மூண்டது. இதுவரை குறைந்தது 30 காவற்துறையினர் இச்சண்டையில் உயிரிழந்தனர் என்று உள்ளூர் ஊடகம் 3ஆம் நாள் தகவல் வெளியிட்டது.

மேலும், இம்மாநிலத்தின் தலைநகருக்குச் செல்லும் ஒரு முக்கிய சாலையில் தலிபான் ஆயுததாரிகள் 12 சோதனை சாவடிகளைக் கைப்பற்றியுள்ளனர். தற்போது வரை இம்மோதல் தொடர்கிறது. ஆப்கானிஸ்தான் இராணுவம் ஹெலிகாப்டர் மூலம் இப்பிரதேசத்துக்கு படையினர்களை அனுப்பியுள்ளது என்று இந்த ஊடகம் மாநில நாடாளுமன்றத் தலைவரின் கூற்றை மேற்கோள் காட்டி அறிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040