• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-சிங்கப்பூர் அரசுத் தலைவர்களின் சந்திப்பு
  2015-07-03 20:44:11  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், சிங்கப்பூர் அரசுத் தலைவர் சான் கெங்யாமுடன் ஜூலை 3ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பும் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, மானிடப் பண்பாட்டுப் பரிமாற்றங்களை விரிவுபடுத்த வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

சீன-சிங்கப்பூர் உறவு நீண்டகாலமாக சீரான முறையில் வளர்ச்சியடைந்து வருகிறது. இரு தரப்பும், நெடுநோக்கு தொடர்புகளை மேலும் வலுப்படுத்தி, வலிமை மிக்க அரசியல் நம்பிக்கை மூலம், இரு நாட்டு ஒத்துழைப்புகளை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

சிங்கப்பூர்-சீன உறவு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது என்றும், பயணி விமான சேவை, நாணயம், உயர் அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, மானிடப் பண்பாட்டியல் உள்பட துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த சிங்கப்பூர் விரும்புவதாகவும் சான் கெங்யாம் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040