தற்போது சீனாவில் "பொது மக்கள் தொழில் துவங்கிடும்" சூழலில், ஒரு புறம், மேலதிக சிறந்த முதலீட்டுத் திட்டப்பணிகள் தோன்றியுள்ளன. சீனாவில் இடர்பாட்டு முதலீட்டுத் துறை, முன்பு கண்டிராத சிறந்த வாய்ப்புகளை கொண்டுள்ளது. மறுபுறம், இடர்பாட்டு முதலீட்டின் அதிகரிப்பு, சீனாவில் புத்தாக்கச் சாதனைகள் தொழில்மயமாகுவதை விரைவுபடுத்தும். 17ஆவது இடர்பாட்டு முதலீடுக் கருத்தரங்கில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீன அரசவை, தொழில் துவக்க மேடை சேவை பற்றிய கருத்தை வெளியிட்ட பிறகு, 200க்கு அதிகமான பல்கலைக்கழகப் பட்டதாரி புத்தாக்கத் தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்கள் புத்தாக்கத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.