கிரேக்கம் நிதியுதவி பெறும் வகையில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கடன் வழங்கும் நாடுகள் முன்வைத்த வரைவு உடன்படிக்கை ஜூலை 5ஆம் நாள் கிரேக்கத்தில் நடைபெற்ற பொது மக்கள் வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டது. சுமார் 94 விழுக்காட்டு வாக்குகளை கணக்கிட்ட பின் இவ்வுடன்படிக்கைக்கு எதிர்ப்பாக, சுமார் 61.3 விழுக்காடும், ஆதரவாக சுமார் 38.7 விழுக்காட்டு மக்களும் வாக்களித்துள்ளனர். கிரேக்க உள்துறை அமைச்சகம் 6ஆம் நாள் வெளியிட்ட புள்ளி விபரம் இதை காட்டுகின்றது.
இம்முடிவு வெளியிட்ட பிறகு கிரேக்கத் தலைமையமைச்சர் அலெக்சிஸ் சிப்ராஸ் தொலைக்காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். இவ்வரைவு உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டது, கிரேக்கம் ஐரோப்பாவிலிருந்து பிரிந்து விடும் என பொருட்படாது என்றும், கடன் பற்றிய தொடரவல்ல கடன் உடன்படிக்கையை வெகு விரைவில் எட்டும் வகையில் பொது மக்கள் வாக்கெடுப்பு முடிவு, கிரோக்க அரசின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.