சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி உறுப்பினரும் வெளி விவகார ஆணையத்தின் உறுப்பினருமான ஃபு யிங் அம்மையார் 27ஆம் நாள் நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் பிரதேச வணிகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே தொடர்பை உருவாக்குவது, இவ்விரு கண்டங்களின் விருப்பமாகும். நிதி மற்றும் தொழில் நுட்பப் பற்றாக்குறையின் காரணமாக இவ்விருப்பம் நீண்டகாலமாக நனவாக்கப்படவில்லை. பல ஆண்டுகால வளர்ச்சியுடன், ஆசிய-ஐரோப்பிய தொடர்புக்கு தடையாக இருந்த காரணிகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆலோசனையை சீனா முன்வைத்தது. இந்த ஆலோசனை, சீனாவுக்கு மட்டுமல்ல ஆசியா மற்றும் சுற்றுப்புறப் பிரதேசங்களுக்கும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என விரும்புவதாக அவர் கூறினார்.
இதனிடையில், சீனா, சிங்கப்பூர், அண்டை பிரதேசங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளும் அறிஞர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, சீனா முன்வைத்த ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆலோசனையை முன்னேற்றி, அதன் மூலம் பிரதேச வளர்ச்சி மற்றும் செழுமையை மேம்படுத்துவது குறித்து விவாதம் நடத்தியுள்ளனர்.