இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இத்தாக்குதல் காலை 5.30 மணிக்குத் தொடங்கியது. தீவிரவாதிகள் முதலில் வாகனம் ஒன்றைக் கடத்தினர். அதன்பின்னர், சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு, தினாநகர் காவல்நிலையத்தைக் கைப்பற்றினர். அங்கு பதுங்கிய அவர்களுடன் பாதுகாப்புப் படையினர் பல மணி நேரம் சண்டையிட்டனர் என்று தெரிவித்தார்.
மேலும், தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருந்த தொடர்வண்டி தண்டவாளத்தில் இருந்து 5 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.