மலேசிய எம்எச் 17 பயணியர் விமான விபத்து பற்றி சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தை அமைப்பது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பவையில் 29ஆம் நாள் வாக்கெடுப்பு நடைபெற்றது. ரஷியா எதிராக வாக்களித்ததால், மலேசியா முன்வைத்த இந்த வரைவுத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
2014ஆம் ஆண்டு ஜுலை 17ஆம் நாள், நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியாவின் லோலாலம்பூருக்குப் பயணித்த மலேசிய ஏர்லைன்ஸைச் சேர்ந்த எம்எச் 17 பயணியர் விமானம், ரஷியாவின் எல்லையை ஒட்டியமைந்துள்ள உக்ரேன் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் இந்த விமானத்தில் பயணித்த 298 பேர் அனைவரும் உயிரிழந்தனர்.