நேபாளத்தின் மேற்கு பகுதியிலுள்ள மியாக்டி பிரதேசத்தில், பலத்த மழை காரணமாக,, ஜுலை 29-ஆம் நாளிரவு மீண்டும் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் 5பேர் உயிரிழந்துள்ளனர். பல வீடுகள் புதைந்துள்ளன என்று அந்நாட்டின் காவற்துறை 30-ஆம் நாள் கூறியுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புதவிப் பணி 30-ஆம் நாள் அதிகாலை முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.