• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-துருக்கி ஒத்துழைப்பு
  2015-07-30 17:23:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், துருக்கியின் அரசுத் தலைவர் ரெசெப் தயிப் எர்டோகனும், பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-துருக்கி பொருளாதார மற்றும் வர்த்தகக் கருத்தரங்கில் கூட்டாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

முதலில், சீனாவும் துருக்கியும், இரு நாட்டுத் துணைத் தலைமையமைச்சர் நிலையிலான ஒத்துழைப்பு ஆணையத்தின் பங்காற்றி, அரசியல், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், பாதுகாப்பு, மானிடப் பண்பாட்டியல் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைக்க வேண்டும். இரண்டாவதாக, அதிவிரைவு தொடர் வண்டி மற்றும் புதிய எரியாற்றல் பற்றிய ஒத்துழைப்பை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, விண்வெளி, நிதி, முதலீடு ஆகிய புதிதாக வளரும் மூன்று துறைகளில் ஒத்துழைப்பை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.

துருக்கி-சீன உறவு உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. துருக்கி மீதான முதலீட்டைச் சீனத் தொழிற்நிறுவனங்கள் வலுப்படுத்த விரும்புவதாக ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040