சீனாவின் உணவு காளான் நகரம் என போற்றப்பட்ட கு தியன் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட உலர்ந்த காளான்கள் தரச் சோதனைக்குப் பின், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தின் நிங்தே தரக் கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பு பணியகம் 30ஆம் நாள் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு முதன்முறையாக ஏற்றுமதி செய்யப்பட்ட இந்த தொகுதி உலர்ந்த காளான்களின் மொத்த எடை 2.9 டன்னாகும்.
சீனாவில் உணவு காளானின் முக்கிய உற்பத்தி இடமாக ஃபுஜியன் மாநிலம் திகழ்கிறது. இம்மாநிலத்தில் வளர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் பல்வகை தரமிக்க காளான்கள் பன்னாட்டுச் சந்தைகளில் மிகவும் வரவேற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.