1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
யாகூப் மேமன், அவரது சகோதரர்கள், ஒரு தங்கை ஆகியோர் இத்தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். இவ்வாண்டு 54 வயதான யாகூப் மேமன், 1994ஆம் ஆண்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.