• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை
  2015-07-30 19:29:09  cri எழுத்தின் அளவு:  A A A   
1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி யாகூப் மேமனுக்கு மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள ஒரு சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று இந்திய அரசு 30ஆம் நாள் அறிவித்தது.

1993ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

யாகூப் மேமன், அவரது சகோதரர்கள், ஒரு தங்கை ஆகியோர் இத்தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் ஆவர். இவ்வாண்டு 54 வயதான யாகூப் மேமன், 1994ஆம் ஆண்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040