69ஆவது ஐ.நா பொது பேரவை 30ஆம் நாள் காட்டு விலங்கு தாவரச் சட்ட மீறல் வர்த்தகத்தை ஒடுக்குவது குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, ஐ.நா உறுப்பு நாடுகளுக்குத் தேசிய அளவில் விநியோகம் மற்றும் தேவை இரு துறைகள் மூலம் இந்த நடவடிக்கைகளை ஒடுக்குமாறு வேண்டுக்கோள் விடுத்தது.
காபொன், ஜெர்மனி, சீனா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள் கூட்டாக முன்வைத்த இத்தீர்மானம் முழு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காட்டு விலங்கு தாவரச் சட்ட மீறல் வர்த்தகத்தின் அளவினைத் தொடர்ந்து விரிவுபடுத்துவது, பொருளாதாரம், சமூகம், சுற்றுசூழல் ஆகியவற்றுக்கு பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவது ஆகியவற்றில் ஐ.நா பொது பேரவை கவனம் செலுத்தி வருகின்றது என்று தீர்மானம் கூறியது.
பல்வேறு நாடுகளுக்கு திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, காட்டு விலங்கு தாவரச் சட்ட மீறல் வர்த்தகத்தைத் தடை செய்து, ஒடுக்குமாறு தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.