ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பு 30ஆம் நாளிரவு வெளியிட்ட அறிக்கையில், அவ்வமைப்பின் தலைவர் முல்லா முகமது ஒமர் நோயினால் உயிரிழந்தார் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் அவரது உயிரிழப்பு நேரம் மற்றும் இடம் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேநாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தலிபான் அமைப்பின் அதியுயர் தலைவர் ஒமரின் மரணம் பற்றிய தகவல் மற்றும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவர்களது கோரிக்கைக்கிணங்க, 31ஆம் நாள் பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் அமைதிக்கான 2ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஒத்திபோடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.