• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குடியோறுவோர் நெருக்கடி பற்றிய சிறப்பு கூட்டம்
  2015-08-31 10:07:43  cri எழுத்தின் அளவு:  A A A   
மோசமாகி வரும் குடியேறுவோர் நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி, பிரான்சு, பிரிட்டன் ஆகிய 3 நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் 30ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அகதிகளின் அடையாளங்களை உறுதிப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில், இவ்வாண்டின் இறுதிக்குள் இத்தாலி, கிரேக்கம் உள்ளிட்ட மத்திய தரைக் கடலோரப் பிரதேசங்களில் அலுவலகங்களை நிறுவி, மத்திய தரைக் கடலைக் கடந்து ஐரோப்பாவில் புகலிடம் தேடும் அகதிகளுக்கு பதிவு சேவையை வழங்க வேண்டும் என்று கூட்டறிக்கை ஒன்றில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040