• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜோர்டான், பாலஸ்தீன தலைவர்களின் பேச்சுவார்த்தை
  2015-08-31 10:44:24  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜோர்டானின் மன்னர் இரண்டாவது அபுதுல் 30ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் அம்மானில் பாலஸ்தீன அரசுத் தலைவர் அபாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய கிழக்கு பிரதேசத்தின் அமைதிப் போக்கினை மீண்டும் துவக்குவது பற்றி அவர்கள் விவாதித்தனர்.

பாலஸ்தீன-இஸ்ரேல் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கி, அனைத்து தடைகளையும் நீக்குவதற்கு, பாலஸ்தீனமும் இஸ்ரேலும் உருவாக்கியுள்ள தீர்வுத் திட்டத்தின்படி, ஜோர்டான் இயன்ற அளவில் முயற்சி மேற்கொண்டு, இப்பிரதேச நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்று ஜோர்டான் மன்னர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040