சிரியாவின் பழங்கால நகரான டேத்மோர்விலுள்ள மிக புகழ் பெற்ற வரலாற்று சின்னங்களில் ஒன்றான பேல் கோயிலின் ஒரு பகுதி ஐ.எஸ் எனும் தீவிரவாத அமைப்பால் நொறுக்கப்பட்டது என்று சிரிய செய்தி நிறுவனம் 31ஆம் நாள் அறிவித்தது.
இவ்வாண்டின் மே திங்கள் பிற்பகுதியில் ஐ. எஸ் அமைப்பு டேத்மோர் நகரை முழுமையாக கைப்பற்றியது. இந்நகரிலுள்ள பல பண்டைய கல்லறைகளும், வரலாற்று சின்னங்களும் சிதைக்கப்பட்டுள்ளன.
டேத்மோர் நகர், சிரியத் தலைநகர் தமஸ்கஸிற்கு வட கிழக்கில் 215 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பண்டைய ரோம் பாணியுடைய இந்நகர், சுமார் 2000 ஆண்டுகள் வரலாறுடையது.