சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு பொது மன்னிப்பு வழங்குவது பற்றி சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தீர்மானம் மற்றும் சீன அரசுத் தலைவரின் கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், சீன உச்ச மக்கள் நீதி மன்றம், உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றம், பொது பாதுகாப்பு அமைச்சகம், தேசிய பாதுகாப்பு அமைச்சகம், சட்ட நீதி அமைச்சகம் ஆகிய 5 வாரியங்கள், இதைச் செயல்படுத்தும் வழிமுறையை வகுத்து, இப்பணியைச் செவ்வனே செய்வதற்கு விதிகளை அளித்துள்ளன.
அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் மற்றும் சட்டக்குழு கூட்டம் நடத்தி, இது தொடர்பான பணிகளுக்கு ஏற்பாடு செய்தது.