2015ஆம் ஆண்டுக்கான ஐ.நாவின் மூன்றாவது சுற்று காலநிலை மாற்ற பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 31ஆம் நாள் ஜெர்மனியின் போன் நகரில் துவங்கியது. 190 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள், புதிய காலநிலை மாற்ற உடன்படிக்கை உள்ளிட்ட அம்சங்கள் பற்றி விவாதிப்பர்.
திட்டத்தின்படி, இவ்வாண்டு டிசம்பர் திங்கள் பாரிஸ் நகரில் புதிய காலநிலை மாற்ற உடன்படிக்கையை பல்வேறு தரப்புகள் உருவாக்கி, 2020ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான பன்னாடுகளின் செயல்களை ஏற்பாடு செய்யும்.