செப்டம்பர் 3ஆம் நாள் காலை 9 மணிக்கு சீன அரசுத்தலைவர் ஷி சின்பிங்கும் அவரது துணைவியார் பெங் லீயுவானும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றிபெற்றுள்ள 70ஆம் ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நடவடிக்கையில் கலந்துகொள்ள வருகை புரிந்திருந்த வெளிநாட்டு அரசியல் தலைவர்களை வரவேற்றனர்.
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், தென்கொரிய அரசுத்தலைவர் பாக் சியுன்-ஹைய் அம்மையார், எகிப்து அரசுத்தலைவர் சிசி முதலிய தலைவர்களும், இந்தியா, பிரேசில், ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ் முதலிய நாடுகளின் பிரதிநிதிகளும், ஐ.நா பொது செயலாளர் பான்கிமூன், உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் மாக்லிட் சென் அம்மையார் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.