ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டுக்கான நினைவு மாநாடு 3ஆம் நாள் காலை 10 மணி பெய்ஜிங்கில் துவங்கியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், சீன மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பீங் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தினார்.
70 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மாபெரும் வெற்றி பெற்றது. உலக பாசிச எதிர்ப்புப் போரும் முழு வெற்றி பெற்றது என்று அவர் கூறினார். அதனுடன் உலகில் பெரிய நாடு என்ற தகுநிலையை சீனா உறுதி செய்துள்ளது. சீன மக்களும் உலகில் அமைதியை நேசிக்கும் மக்களின் மதிப்பைப் பெற்றுள்ளனர்.
ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிரான போரில் சர்வதேசச் சமூகத்தில் சீன மக்கள் பரந்த ஆதரவைப் பெற்றனர். இப்போரின் வெற்றிக்கு பல்வேறு நாடுகளின் மக்கள் ஆற்றிய பங்கை சீன மக்களின் மனதில் என்றும் பதிந்துள்ளது என்று ஷி ச்சின்பீங் கூறினார்.
போரின் துன்பத்தை அனுபவித்த மக்கள் அமைதியை மேலும் பேணிமதிக்கின்றனர். இன்று நாங்கள் மாபெரும் நினைவு நடவடிக்கை மேற்கொள்வதற்கான நோக்கம், வரலாற்றையும் முன்னோடிகளையும் நினைவு கூர்ந்து, அமைதியை பேணிமதித்து, எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திறந்து வைப்பதாகும் என்று ஷி ச்சின்பீங் தெரிவித்தார்.