சீனா 3 இலட்சம் படையினரைக் குறைக்கும் என்று சீன அரசு தலைவர் ஷி ச்சின்பிங் செப்டம்பர் 3 ஆம் நாள் நினைவு மாநாட்டில் அறிவித்தார். 2003ஆம் ஆண்டு சீனா 2 இலட்சம் படையினரைக் குறைத்த பிறகு மேற்கொள்ளும் முக்கிய முடிவு இதுவாகும்.
சீனா உலகிற்கு அமைதியின் அறிகுறியைத் தெரிவித்ததோடு, சுயநம்பிக்கையையும் தெரிவிக்கிறது என்று சீன இராணுவ அறிவியல் கழகத்தின் ஆய்வாளர் வென்பிங் கூறினார்.
அமைதியான வளர்ச்சிப் போக்கில், எந்த நாட்டையும் அச்சுறுத்தாமல் இருக்கும் முன்நிப்பந்தனையில், சீனா அமைதியாக இராணுவ ஆற்றலை வலுப்படுத்தும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.