• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் 69 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் ஏலம்
  2015-09-03 16:36:01  cri எழுத்தின் அளவு:  A A A   
சிறிய மற்றும் நடுத்தர எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் 69ஐ தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதன் புதன்கிழமை கூறுகையில், "எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் ஏலம் 3 திங்கள் காலத்துக்குள் தொடங்கும். இந்த வயல்கள், இருந்து சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டுள்ளன" என்று தெரிவித்தார்.

வருவாயை பகிர்ந்து கொள்ளுதல் என்கிற அடிப்படையில் இந்த வயல்கள் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விடப்பட உள்ளன.

தற்போது, உலக அளவில் அதிக அளவிலான பெட்ரோலிய பொருள்களை இறக்குமதி செய்வதில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040