ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூனை, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 3ஆம் நாள் வியாழக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதன் 70ஆவது ஆண்டுக்கான நினைவு மாநாட்டில் பான் கி மூனின் பங்கேற்புக்கு ஷி ச்சின்பிங் வரவேற்பு தெரிவித்தார். இந்த நினைவு மாநாடு நடத்தும் நோக்கம், சீன மக்கள் அமைதியை பேணிக்காக்கும் மனவுறுதியை வெளிக்காட்டுவதற்கானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகள் கூட்டு முயற்சி மேற்கொண்டு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி ஆகியவற்றை மையமாக கொள்ளும் புதிய சர்வதேச உறவை உருவாக்க பாடுபட வேண்டும் என்று ஷி ச்சின்பிங் சந்திப்பின்போது கூறினார்.