ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி உச்சிமாநாடு செப்டம்பர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை நியூயார்க்கிலுள்ள ஐ.நாவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேலான நாடுகளின் அரசுச் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்றத் தலைவர்கள் இதில் கலந்து கொள்ள உறுதி செய்துள்ளனர் என்று ஐ.நாவின் செய்தி அலுவலகம் 3ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. 2015ஆம் ஆண்டுக்குப் பிந்திய தொடரவல்ல வளர்ச்சி பற்றிய நிகழ்ச்சி நிரல் இவ்வுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டின் போது முழு அமர்வு நடத்துவர். வறுமை ஒழிப்பு, பெண்களுக்கு உரிமை வழங்குதல், காலநிலை மாற்றம் முதலியவை பற்றி பல விவாத கூட்டங்களும் நடைபெறும்.