சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 6-வது அமைச்சர் நிலை கூட்டம், உச்சி மாநாடாகவே கருதி நடத்தப்படும். இது, இவ்வாண்டு டிசம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும். சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் மாய்டி நௌன மஷாபனவும் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் கூட்டாக இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் உச்சி மாநாடு ஆப்பிரிக்காவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும் என்றும், வரலாற்றுத் தன்மை வாய்ந்த உச்சி மாநாடு இதுவாகும் என்றும் வாங்யீ நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாடு நடைபெறும்போது, சீனாவும் ஆப்பிரிக்காவும் அரசியல் அறிக்கையை வெளியிடும் என்றும், ஆப்பிரிக்காவின் வளர்ச்சியையும், சீன-ஆப்பிரிக்க கூட்டு வளர்ச்சியையும் இரு தரப்பு ஒத்துழைப்பு விரைவுப்படுத்துவதற்கானதை, அனைத்து ஆப்பிரிக்க நாடுகளுக்கும் வெளிக்காட்டும் என்றும் மஷபன குறிப்பிட்டார்.