• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம்
  2015-10-05 19:01:51  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 30ஆவது கூட்டம் ஜெனீவாவில் நிறைவுற்றது. மனித உரிமை, அதிதீவிரவாத தடுப்பு மற்றும் எதிர்ப்பு ஆகியவை தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முன்வைத்த தீர்மானம் ஒன்று 2ஆம் நாள் இக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் சீனா பங்கெடுக்கவில்லை.

அதிதீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை மனிதகுலத்தின் எதிரி. இவைகளால் பாதிக்கப்பட்ட சீனா, எந்த வடிவிலான அதிதீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்க்கிறது. அத்துடன், அதிதீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் போது வேறுபட்ட வரையறைகள் மற்றும் தெரிவு தன்மை வாய்ந்த செயல்களை மேற்கொள்வதையும் சீனா எதிர்க்கிறது. மனித உரிமை மன்றம் ஏற்றுக்கொண்ட இந்த தீர்மானத்தின் சரி சம நிலை போதுமானது அல்ல. சீனா உள்ளிட்ட நாடுகளின் சார்பில் ரஷியா முன்வைத்த முக்கிய திருத்த அம்சங்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக தொடர்புடைய வாக்கெடுப்பில் சீனா பங்கெடுக்கவில்லை என்று சீனப் பிரதிநிதிக் குழு விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040