• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச வறுமை வரையறை உயர்வு
  2015-10-05 19:04:50  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச வறுமை வரையறையை தனிசரி ஒருவருக்கு 1.25 அமெரிக்க டாலரிலிருந்து 1.9 அமெரிக்க டாலராக உயர்த்துவதாக உலக வங்கி 4ஆம் நாள் அறிவித்துள்ளது. வறுமையை ஒழித்து செழுமையைக் கூட்டாக அனுபவிப்பது என்ற தலைப்பில் அன்று வெளியான அறிக்கையில் இந்த புதிய தரவு வெளியிடப்பட்டது.

உலக வங்கியின் முதன்மை பொருளியலாளர் காவ்ஷிக் பாசு பேசுகையில், நடப்பு வறுமை வரையறை உயர்வு, 2005ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட விலை உயர்வை வெளிப்படுத்துவதற்காக தான் என்று கூறினார்.

உலக வங்கியின் புள்ளிவிபரங்களின்படி, கிழக்காசியா, பசிபிக் பிரதேசம், தெற்காசியா, சஹாராவுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வறிய மக்களின் எண்ணிக்கை உலகிலுள்ள மொத்த வறிய மக்களின் எண்ணிக்கையில் 95 விழுக்காடு வகிக்கிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040