• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் ஒரு மருத்துவ மனை மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா கேட்ட மன்னிப்பு
  2015-10-08 09:37:26  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா "Doctors Without Borders" என்னும் சர்வதேச மருத்துவ மீட்புதவி அமைப்புக்கு அனுப்பிய செய்தியில், "ஆப்கானிஸ்தானில் இவ்வமைப்பின் ஒரு மருத்துவ மனை மீது அமெரிக்கப்படை வான் தாக்குதல் தொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார்".

வட ஆப்கானிஸ்தானின் குன்துஸ் நகரில் உள்ள இம்மருத்துவ மனை 3ஆம் நாள் வான் தாக்குதலுக்குள்ளாயிற்று. இதில் 12 பணியாளர்களும், 3 குழந்தைகள் உள்பட 10 நோயாளிகளும் உயிரினழந்தனர்.
இத்தகைய சம்பவம் மீண்டும் நிகழாமல் தவிர்க்கும் வகையில், இம்மருத்துவ மனை மீது வான் தாக்குதல் தொடுத்ததற்குப் பொறுப்பாளருக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய பேரவையின் கூட்டத்தில் 7ஆம் நாள் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040