ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் மறுசீரமைப்பு வளர்ச்சி முன்னேற்றப் போக்கை சர்வதேச சமூகம் ஆக்கமுள்ளதாக விரைவுபடுத்த வேண்டும் என்று ஜெனீவா மற்றும் ஸ்விட்சர்லாந்திலுள்ள ஐ.நா அலுவலகத்துக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி வூ கெய் லொங் அக்டோபர் திங்கள் 7ஆம் நாள் ஐ.நாவின் அகதி அலுவலகத்தின் உயர் நிலைக் கூட்டத்தில் உரைநிகழ்த்திய போது தெரிவித்தார்.
போர் மற்றும் உள்நாட்டு கலவரம் போன்ற காரணிகளால், ஆப்கானிஸ்தானில் அகதிகள் பெருகி உள்ளனர். அமைதியான கட்டுமானத்தை விரைவுப்படுத்தி, சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை பயனுள்ளதாக முன்னேற்றுவதன் மூலம், அகதிகள் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து, ஆப்கானிஸ்தானில் வெகுவிரைவில் அமைதி, நிதானம் மற்றும் செழுமையை நனவாக்க சீனா முயற்சி செய்ய விரும்புகிறது. அகதிகள் பிரச்சினையை வெகுவிரைவில் தீர்க்க விரைவுபடுத்த என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.