• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய விமானப் படையில் விரைவில் பெண் விமானி
  2015-10-08 15:46:18  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்திய விமானப் படையில் விரைவில் பெண் விமான ஓட்டுநர்கள் சேர்க்கப்படுவர் என்று விமானப் படைத் தளபதி அருப் ரஹா வியாழக்கிழமை தெரிவித்தார்.

தலைநகர் புது தில்லியில் 83ஆவது விமானப் படை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் விமானப் போக்குவரத்து சேவை மற்றும் ஹெலிகாப்டர்களில் பெண் விமான ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, இளம் மங்கையரின் ஆர்வத்துக்கு இணங்க, இந்திய விமானப் படையிலும் பெண்களை விமானிகளாக நியமிக்க ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

எதிரிகளிடம் அகப்பட நேர்ந்தால் பெண் விமானிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்படுவர் என்ற அச்சத்தினாலே இந்திய விமானப் படையில் அவர்கள் சேர்க்கப்படவில்லை.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040