• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பன்னாட்டு படையின் வான்தாக்குதலில் 26 பேர் பலி
  2015-10-08 17:25:55  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏமன் நாட்டின் தென் மேற்கு பகுதியிலுள்ள டாமார் மாநிலத்தில் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்த இடம் மீது, 7ஆம் நாளிரவு, சௌதி அரேபியாவின் தலைமையிலான பன்னாட்டுப் படை வான்தாக்குதல் நடத்தியது. அதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமுற்றனர். உயிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மகளிர் மற்றும் குழந்தைகள் என்று ஏமன் மருத்துவப் பணியாளர் ஒருவர் 8ஆம் நாள் கூறினார்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பொது மக்களின் திருமண விழா நடைபெற்ற இடத்தின் மீது பன்னாட்டுப் படை வான்தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறை.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040